முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு முருங்கை கீரையை சூரிய ஒளியில் காய வைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
மேலும் இதனுடன் சீரகம் மற்றும் நன்கு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொண்டு லேசாக வதக்க வேண்டும்.மேலும் இதனுடன் நறுக்கிய பூண்டையும் சேர்த்துக்கொண்டு வதக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு,கால் சிட்டிகை சுக்கு பொடி மற்றும் 5 கிராம் மிளகு பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 150 மி.லி நிரையும் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.கடைசியாக இரண்டு தேக்கரண்டி முருங்கை கீரை பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது மருத்துவ குணமிக்க முருங்கை கீரை சூப் தயார் ஆகி விடும்.இதனை வாரம் இருமுறை குடித்து வந்தால் தொப்பை முற்றிலுமாக நீங்கும்.