குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

இஞ்சிசிறிய துண்டு
பூண்டு (பற்கள்)1
வால் மிளகு7 எண்ணம்
தூதுவளை இலைஒரு கைப்புடி அளவு
தேன்10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இஞ்சி,பூண்டு (பற்கள்) மற்றும் வால் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு தூதுவளை  இலையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு அரைத்த தூதுவளை  இலையை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு ஏற்கனவே இஞ்சி,பூண்டு (பற்கள்) மற்றும் வால் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் அரைத்த பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இவற்றுடன்  10 மி.லி தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மூலிகை மருந்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் உணவிற்கு  முன் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சு சளி அறவே நீங்கும்.