குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

தேவையான பொருள்

வல்லாரைக்கீரைஒரு கப்
கறிவேப்பிலை கால் கப்
கொள்ளு கால் கப்
உளுந்தம் பருப்பு3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்7
பெருங்காயத்தூள்சிறிதளவு
சீரகம் கால் டீஸ்பூன்

உப்பு 

தேவையான அளவு

செய்முறை

  • வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
  • கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
  • அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
  • சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
வல்லாரைக்கீரை
கறிவேப்பிலை