தேவையான பொருள்
பெருங்காயம் | 5 கிராம் |
கடுகு | 5 கிராம் |
உப்பு | 5 கிராம் |
பூண்டு(பற்கள்) | 5 எண்ணிக்கை |
திப்பிலி | 5 கிராம் |
நல்ல எண்ணெய் | 200 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு நல்ல எண்ணெய் தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தைலமாக மாறும் வரை நன்கு காய்ச்சவும்.
- பிறகு நன்கு உலர வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- காது வலி உள்ள நேரங்களில் இந்த தைலத்தை மூன்று சொட்டுகள் காதினுள் விட்டு வர காது சம்மந்தமான எல்லா நோய்களும் தீரும்.