முழு உடலுக்கும் ஆரோக்கியம் தருகின்ற முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

முடக்கத்தான் கீரை இலை 10 எண்ணிக்கை
சீரகம் 5 கிராம்
மிளகு 5 எண்ணிக்கை
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். 
  • மேலும் அதனுடன் முடக்கத்தான் கீரை இலை,அரை தேக்கரண்டி சீரகம், மற்றும் மிளகு ஆகிய மூன்று வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு வடிகட்டிய நீரை தொடர்ந்து ஒரு வாரம் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் தேநீர் குடித்து வந்தால் இருமல், சளி மற்றும் தொண்டை கட்டி ஆகிய நோய்கள் முற்றிலுமாக தொலைந்து போகும்.
  • மேலும் இதனுடன் முடக்கு வாத நோய்களும் அறவே நீங்கும்.