மூலநோய் ஏற்படுவதை தடுப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சோற்று கற்றாழை(தோல் நீக்கிய உட்பகுதி) 5 கிராம்
துத்தி இலை விழுது ஒரு கைப்புடி அளவு
நெல்லிக்காய் துருவல் 10 கிராம்
கடுக்காய் தூள் 10 கிராம்
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு பனை வெல்லதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு லேசான சூட்டில் வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் அரைத்த துத்தி இலை விழுது மற்றும்  நெல்லிக்காய் துருவல் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.
  • மேலும் இதனுடன் சோற்று கற்றாழை (தோல் நீக்கிய உட்பகுதி) சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு மீதம் உள்ள கடுக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு லேகியம் தன்மை வரும் அளவு  சிறிது நேரம்  சூடாக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான லேகியத்தை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக்கொண்டு காலை மற்றும்  இரவு ஆகிய நேரங்களில் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலுமாக நீங்கும்.