இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சுக்கு10 கிராம்
இலவங்கப் பட்டை10 கிராம்
கிராம்பு5 கிராம்
திப்பிலி5 கிராம்
மிளகு5 கிராம்
அமுக்கரா கிழங்குப்பொடி5 கிராம்
பனை வெல்லம்தேவையான அளவு
தண்ணீர்100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சுக்கு,லவங்கப்பட்டை,கிராம்பு,திப்பிலி மற்றும் மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக பொடியாக்கப்பட்டப்  பொருட்களையும் சேர்த்துக்கொண்டு  தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
  •  இவ்வாறு கிடைக்கபெற்ற நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு தனியான பாத்திரத்தில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மேலும் இதனுடன் வடிகட்டிய நீரையும் சேர்த்துக்கொண்டு சுண்ட காய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருத்துவ நீரை காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும்  ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் இரத்த குழாய் சம்பந்தமான  நோய்கள் நீங்கும்.