தேவையான பொருள்
துளசி இலை | ஒரு கைப்புடி அளவு |
கற்பூரவல்லி இலை | ஒரு கைப்புடி அளவு |
மிளகு | 5 கிராம் |
தண்ணீர் | 200 மி.லி |
தேன் | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
- மேலும் இதனுடன் துளசி இலை,கற்பூரவல்லி இலை மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
- பிறகு 200 மி.லி நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி அப்புறம் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வடிகட்டிய நீருடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து குடித்து வந்தால் கொடிய காய்ச்சலும் கூட நம் உடலை அண்டாது.