உடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம்

தேவையான பொருள்

நிலக்கடலை 150 கிராம்
கருப்பு எள்ளு 50 கிராம்
கருப்பு உளுந்து 200 கிராம்
பொட்டு கடலை 100 கிராம்
பாகு வெல்லம் 100 கிராம்
நெய் 150 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கருப்பு உளுந்து,பொட்டு கடலை,நிலக்கடலை மற்றும் கருப்பு எள்ளு ஆகிய நான்கு வகையான பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் பாகு வெல்லம் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும்.பிறகு நெய்யை மிதமான சூட்டில் காய்ச்சி இதனுடன் சேர்த்து சிறிய உருண்டை புடித்து சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இந்த உருண்டையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சம்பந்தமான எந்த வலியும் நம்மை அண்டாது.