வாய் புண் வேகமாக குணமாக சிறந்த வீட்டு வைத்தியம் August 5, 2020 | No Comments தேவையான பொருள் சீரகம் 200 கிராம் ஓமம் 100 கிராம் ஏலக்காய் 100 கிராம் மிளகு 100 கிராம் பனங்கற்கண்டு 500 கிராம் தண்ணீர் 500 மி.லி நெய் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சீரகம்,ஓமம்,ஏலக்காய்,மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 500 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நன்கு பாகு தன்மை அடையும் வரை கொதிக்க வைக்கவும்.மேலும் இதனுடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் 50 மி.லி நெய் சேர்த்துக்கொள்ளவும்.இப்போது சுவையான லேகியம் தயார்.இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் புண் நீங்கும். நெய் தண்ணீர் சீரகம் மிளகு ஏலக்காய் ஓமம் பனங்கற்கண்டு Related posts:முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்குழந்தைகளுக்கு மலச்சிக்கலை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்