பற்பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆவாரம் பூவின் தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

ஆவாரம் பூ ஒரு கைபுடி அளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஆவாரம் பூவை (இலைகள் அல்லது வேர்களையும் பயன்படுத்தலாம்) நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும்.
  • இதன் பிறகு காய வைத்த ஆவாரம் பூவை எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு 100 மி.லி  நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நீரை கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் இடித்த பொருட்களை ஒரு தேக்கரண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி நீரை 50 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த நீரை தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் சர்க்கரை நோய்களையும்,சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.