தேவையான பொருள்
உலர் திராட்சை | 100 கிராம் |
துளசி இலை | 100 கிராம் |
எலுமிச்சை சாறு | 5 மி.லி |
தேன் | 10 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு உலர் திராட்சை மற்றும் துளசி இலை இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.
- அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
- மேலும் இதனுடன் 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 மி.லி தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க இந்த சாறை தினந்தோறும் காலை வேளைகளில் குடித்து வந்தால் தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.