கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

வெள்ளைப்பூண்டு 50 கிராம்
தேங்காய் எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தோல் உரித்த வெள்ளைப்பூண்டை ஒன்று இரண்டாக கல்வத்தில் போட்டு நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சி அதனுள் நசுக்கி எடுத்துக்கொண்ட வெள்ளைப்பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  • இதன் பிறகு வறுத்து எடுத்த இந்த அற்புதமான பூண்டு தைலத்தை நன்றாக குளிர ஆர வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பாத்திரம் படுத்த வேண்டும்.
  • நோய் கண்ட காலத்தில் இந்த தைலத்தை எடுத்து நெற்றில் மற்றும் பிடரி கழுத்துப்  பகுதியில்  வைத்து தேய்த்து வந்தால் தலைவலி,கழுத்துவலி நீங்கும்.சொரிசிரங்கு உள்ள புண்னில் பஞ்சு மூலம் தேய்த்து வந்தால் சொரிசிரங்கு புண் நம்மை அண்டாது.