ஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்

தேவையான பொருள்

சித்தரத்தை பொடி 25 கிராம்
திப்பிலி 5 எண்ணிக்கை
சுக்கு தேவையான அளவு
வில்வஇலை 5 இலை
மிளகு 7 எண்ணிக்கை
மலைத்தேன் தேவையான அளவு
வெற்றிலை 1 முழுமையான இலை
தண்ணீர் 100 மி.லி.

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு திப்பிலி,சுக்கு ,மிளகு,வில்வஇலை மற்றும் வெற்றிலை ஆகிய ஐந்துப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து,அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அரைத்தப் பொருட்களை 100 மி.லி தண்ணீர் இட்டு நன்றாக கலக்க  வேண்டும்.இதன் பிறகு சித்தரத்தை பொடியையும் கால் தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தண்ணீருடன் சேர்த்து கலக்க வேண்டும்.இதனுடன் தேவையான அளவு தேனையும் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான அற்புதமான நீரை உணவுக்குப்பின் சாப்பிட வேண்டும்.இதனை 48 நாட்களுக்கும் தொடர்ந்து செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா எனும் நோய் நீங்கும்.
சித்தரத்தை பொடி
திப்பிலி
சுக்கு
வில்வஇலை
தண்ணீர்
வெற்றிலை
மிளகு
மலைத்தேன்