முகம் வசீகரம் பெற உதவும் அற்புத பாரம்பரிய வைத்தியம்

தேவையான பொருள்

கசகசா பொடி தேவையான அளவு
சிவப்பு கொய்ய 1
மஞ்சள் தூள் 5 கிராம்
பன்னீர் ரோஜா 1
நாட்டு பசும்பால் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கசகசா பொடி மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு சிவப்பு கொய்ய மற்றும் பன்னீர் ரோஜா இதழ் இரண்டையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு அரைத்ததை எடுத்துக்கொண்டு ஏற்கனவே உள்ள கசகசா பொடி மற்றும் மஞ்சள் தூள் உடன் சேர்த்து பிறகு தேவையான அளவு நாட்டு பசும்பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான பாரம்பரிய மருந்தை வெயில் காலங்களில் காலை நேரங்களில் முகத்தில் போட்டுக்கொண்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் சம்பந்தமான நோய்கள் நீங்கி முகம் வசீகரம் பெறும்.
சிவப்பு கொய்ய
மஞ்சள் தூள்
கசகசா பொடி
பன்னீர் ரோஜா