தேவையான பொருள்
| தண்ணீர் | 300 மி.லி |
| இஞ்சி | சிறிய துண்டு |
| சீரகம் | 5 கிராம் |
| பெருஞ்சிரகம் | 5 கிராம் |
| கறிவேப்பிலை | ஒரு கைப்புடி அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு இஞ்சி,சீரகம்,கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த பொருட்களுடன் 300 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
- மேலும் இந்த நீரை 150 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.
- பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீரை அஜீரணம் உள்ள நேரங்களில் குடித்து வந்தால் செரிமானம் சக்தி அதிகரித்து உடலின் சோர்வை முற்றிலுமாக அகற்றும்.

