தேவையான பொருள்
| பிரண்டை | 100 கிராம் |
| மிளகு | 10 கிராம் |
| சீரகம் | 5 கிராம் |
| வெந்தையம் | கால் சிட்டிகை |
| வத்தல் | 1 |
| புளி | 5 கிராம் |
| உப்பு | தேவையான அளவு |
| நல்ல எண்ணெய் | 50 மி.லி |
| பெருங்காயம் | 5 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு பிரண்டையை நன்கு தோல் சீவி சிறிய துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 25 மி.லி நல்ல எண்ணெய்யை இட்டு இதனுடன் மிளகு,சீரகம்,வெந்தையம்,வத்தல்,புளி,உப்பு மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களையும் சேர்த்து நன்கு வசக்க வேண்டும்.
- இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதை போல பிரண்டையும் நல்ல எண்ணெய் உடன் சேர்த்து வசக்க வேண்டும்.
- இவ்வாறு வசக்கி எடுத்த பொருட்களையும் எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த பொருட்களை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

