தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம் September 16, 2020 | No Comments தேவையான பொருள் நல்ல எண்ணெய் 100 மி.லி வில்வ இலை 20 கிராம் துளசி இலை 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வில்வ இலை மற்றும் துளசி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.அரைத்த இலைகளை பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நல்ல எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த எண்ணெய் உடன் அரைத்த சாற்றை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு இதனை குளிர ஆற வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.நோயுள்ளவர்கள் நாள்ளொன்றுக்கு ஒரு தேக்கரண்டி அளவு இந்த தைலத்தை எடுத்து தொண்டையில் படும்படி செய்து 5 நிமிடம் கழித்து தைலத்தை வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர தொண்டையில் ஏற்பட்ட சதைவளர்ச்சி படிப்படியாக குணமாகும். துளசி இலை வில்வ இலை நல்ல எண்ணெய் Related posts:வெள்ளைப்போக்கிற்கு மருந்தாகும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்