தேவையான பொருள்
முருங்கை கீரை இலை | ஒரு கைப்புடி அளவு |
பச்சை மிளகாய் | 3 எண்ணிக்கை |
மிளகு மற்றும் சீரகம் (அரைத்த பொடி ) | 10 கிராம் |
சீரகம் | 5 கிராம் |
சின்ன வெங்காயம் | 100 கிராம் |
தக்காளி | 250 கிராம் |
மஞ்சள் தூள் | 5 கிராம் |
உப்பு | தேவையான அளவு |
நல்ல எண்ணெய் | தேவையான அளவு |
தண்ணீர் | 200 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
- மேலும் இதனுடன் சீரகம் மற்றும் நன்கு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொண்டு லேசாக வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக்கொண்டு வசக்க வேண்டும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு கறிவேப்பிலை,கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
- பிறகு 200 மி.லி நிறையும் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.கடைசியாக முருங்கை கீரை இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது மருத்துவ குணமிக்க முருங்கை கீரை சூப் தயார் ஆகி விடும்.