தேவையான பொருள்
சோளம் | 20 கிராம் |
கம்பு | 20 கிராம் |
பாசி பயிறு | 20 கிராம் |
பொட்டு கடலை | 20 கிராம் |
உளுந்து | 20 கிராம் |
பார்லி அரிசி | 20 கிராம் |
சம்பா கோதுமை | 20 கிராம் |
தண்ணீர் | 500 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு மேல உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இந்த நீருடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை சேர்த்துக்கொண்டு கஞ்சி தன்மை அடையும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கி பாகு தன்மையை அடைய செய்ய வேண்டும்.இப்போது சக்தி மிகுந்த சத்து மாவு கஞ்சி தயார் ஆகிவிடும்.