தேவையான பொருள்
வாழைப்பழம் | 1 |
பால் | 200 மி.லி |
கற்கண்டு | தேவையான அளவு |
வெண்ணெய் | 5 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 200 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக நறுக்கிய வாழைப்பழ துண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு இதனுடன் தேவையான அளவு கற்கண்டு மற்றும் 5 மி.லி வெண்ணையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த மருத்துவம் மிக்க பாலை தினந்தோறும் காலை நேரங்களில் பருகி வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக அதிகரித்து உடலின் சதைப்பற்றையும் அதிகரிக்க செய்யும்.