ஒரு சரியான மூலிகை தேநீர் செய்வது எப்படி

தேவையான பொருள்

தண்ணீர் 250 மி.லி
பெருஞ்சிரகம் 5 கிராம்
ஏலக்காய் 2 எண்ணிக்கை
இலவங்க பட்டை பொடி சிறிதளவு
இஞ்சி சிறிய துண்டு
புதினா இலை சிறிதளவு
லெமன் கிராஸ் இலை சிறிதளவு
பனை வெல்லம் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • பெருஞ்சிரகம்,ஏலக்காய்,இஞ்சி ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்து தண்ணீர் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் தண்ணீர் உடன் இலவங்க பட்டை பொடி, லெமன் கிராஸ் இலை,புதினா இலை மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களை சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் நீரை பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
  • இதனை தொடர்ந்து காலை நேரங்களில் குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.