தேவையான பொருள்
தண்ணீர் | 250 மி.லி |
மிளகு | 5 எண்ணிக்கை |
இலவங்க பட்டை | சிறிதளவு |
இஞ்சி | சிறிய துண்டு |
எலுமிச்சை | அரைத்துண்டு |
துளசி இலை | 10 எண்ணிக்கை |
கிராம்பு | 4 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
- இஞ்சி,இலவங்கப்பட்டை மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்து தண்ணீர் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் தண்ணீர் உடன் துளசி இலை மற்றும் 4 கிராம்பு சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் நீரை பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
- இதனை தொடர்ந்து காலை நேரங்களில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.