தேவையான பொருள்
தண்ணீர் | தேவையான அளவு |
புழுங்கல் அரிசி | ஒரு கைப்புடி அளவு |
வெந்தையம் | 10 கிராம் |
சீரகம் | 5 கிராம் |
பூண்டு (பற்கள்) | 5 எண்ணிக்கை |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- இதன் பிறகு புழுங்கல் அரிசி மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை சேர்த்து அதில் வெந்தயத்தை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை சேர்த்துகொண்டு அதனுடன் இடித்து பொடியாக்கிய அரிசி மற்றும் சீரகத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் இதனுடன் பூண்டு (பற்கள்) மற்றும் உப்பும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது உடலின் ஜீரண தன்மையை அதிகரிக்க செய்யும் வெந்தய கஞ்சி தயார் ஆகி விடும்.