தேவையான பொருள்
தண்ணீர் | 250 மி.லி |
இஞ்சி | சிறிய துண்டு |
வெங்காயம் | 10 கிராம் |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
தேன் | 5 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு இஞ்சியின் தோலை அகற்றி நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
- மேலும் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கவும்.
- இதை போல வெங்காயத்தையும் சிறிய துண்டாக நறுக்கவும்.
- பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் தண்ணீருடன் நறுக்கிய பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
- இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் நுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதவும்.