முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

கற்பூர துளசி ஒரு கைப்புடி அளவு
புதினா இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 200 மி.லி
தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கற்பூர துளசி இலை மற்றும் புதினா இலை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் கொதிக்கும் தண்ணீருடன் அரைத்த பொருட்களை சேர்த்து கொண்டு 100 மி.லி நீர் வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீருடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்துக்கொண்டு தினந்தோறும் இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்கும்.