தேவையான பொருள்
பன்னீர் ரோஜா | 2 எண்ணம் |
நன்னாரி வேர் | 2 கிராம் |
செம்பருத்தி பூ | 2 எண்ணம் |
பனை வெல்லம் | தேவையான அளவு |
பெருஞ்சிரகம் | 2 கிராம் |
தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரக பொடியை சேர்க்க வேண்டும்.
- மேலும் இதனுடன் செம்பருத்தி பூ,பன்னீர் ரோஜா,மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு உருவான நீரை உடல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடு நிரந்தரமாக குறைந்து விடும்.