தேவையான பொருள்
துளசி இலை | 10 எண்ணிக்கை |
பனை வெல்லம் | தேவையான அளவு |
புதினா இலை | 5 எண்ணிக்கை |
வெற்றிலை | பாதியளவு |
இஞ்சி | சிறிதளவு |
தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் பனை வெல்லம் தவிர மீதி உள்ள எல்லா பொருட்களையும் நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு இந்த நீருடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இவ்வாறு உருவான இந்த நீரை 10 மாத குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி மற்றும் 1-3 வயது உள்ள குழந்தைகளுக்கு மூன்று தேக்கரண்டி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் கொடுக்கவும்.
- தொடர்ந்து 3 நாட்கள் இந்த நீரை குடித்து வர குழந்தைகளுக்கு பசி தன்மை அதிகரிக்கும்.