தேவையான பொருள்
சுக்கு | 10 கிராம் |
மிளகு | 10 கிராம் |
திப்பிலி | 10 கிராம் |
கறிவேப்பிலை | 10 இலைகள் |
பெருங்காயம் | 5 கிராம் |
ஏலக்காய் | 5 கிராம் |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சுக்கு,மிளகு,திப்பிலி மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் ஒன்று சேர சேர்த்துக்கொண்டு நன்கு வறுக்க வேண்டும்.
- மேலும் இதனுடன் பெருங்காயம்,ஏலக்காய் மற்றும் இந்துப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
- இதன் பிறகு பொன்னிறமாக வறுத்து எடுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு உருவாக்கப்பட்ட அன்னப்பொடியை தினமும் உணவுடன் அரைத்தேக்கரண்டி சேர்த்துக்கொண்டால் ஜீரணம் எளிதாக நடைபெறும்.