சளி மற்றும் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருத்துவம்

தேவையான பொருள்

மிளகு 10 எண்ணிக்கை
சுக்கு சிறிதளவு
ஏலக்காய் 2 எண்ணிக்கை
கொத்தமல்லி 5 கிராம்
சீரகம் 5 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி
ஓமவல்லி இலை 1 அல்லது 2
நாட்டு சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகுசீரகம்,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் சுக்கு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  •  பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஓமவல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சளி நீங்கும்.