தேவையான பொருள்
தண்ணீர் | 200 மி.லி |
இஞ்சி | சிறிதளவு |
நாட்டு சர்க்கரை | சிறிதளவு |
எலுமிச்சை பழம் | அரைத்துண்டு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் இடித்த இஞ்சி சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- வடிகட்டிய பொருட்களுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை நிச்சயமாக அதிகரிக்க முடியும்.
பயன்கள் :
1) உடல் உறுப்பை சுறுசுறுப்பு அடைய செய்யும்.
2) மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும்.
3) உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் கரையும்.