நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு ஆரோக்கிய பானம் July 29, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு 7 எண்ணிக்கை இஞ்சி சிறிய துண்டு பனங்கற்கண்டு தேவையான அளவு இலவங்க பட்டை சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.மேலும் நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள்,இலவங்கபட்டை,இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது சுவைமிகுந்த பானம் தயார்.இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இஞ்சி மிளகு மஞ்சள் பொடி தண்ணீர் பனங்கற்கண்டு இலவங்க பட்டை Related posts:சிறுநீரக கல் மற்றும் பித்த கல் கரைய ஒரு எளிய வழி மருத்துவம்தலைவலி தீரவயிற்றுவலி நீங்ககடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்