நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு ஆரோக்கிய பானம்

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு
மிளகு 7 எண்ணிக்கை
இஞ்சி சிறிய துண்டு
பனங்கற்கண்டு தேவையான அளவு
இலவங்க பட்டை சிறிய துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.
  • மேலும் நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள்,இலவங்கபட்டை,இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த  நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது சுவைமிகுந்த பானம் தயார்.
  • இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இஞ்சி
மிளகு
மஞ்சள் பொடி
தண்ணீர்
பனங்கற்கண்டு
இலவங்க பட்டை