தேவையான பொருள்
| தோலுரித்த சின்ன வெங்காயம் | 10 (பொடியாக நறுக்கவும்) | 
| பூண்டு | 8 பல் | 
| தாளிப்பு வடகம் | ஒரு டேபிள்ஸ்பூன் | 
| வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் | தலா கால் டீஸ்பூன் | 
| புளி | சிறிய எலுமிச்சை அளவு | 
| வெல்லம் | ஒரு சிறிய துண்டு | 
| கறிவேப்பிலை | சிறிதளவு | 
| நல்லெண்ணெய், உப்பு | தேவையான அளவு | 
| வறுத்து அரைக்க: | |
| கறிவேப்பிலை | 3 கைப்பிடி அளவு | 
| மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி | தலா ஒரு டீஸ்பூன் | 
| மல்லி (தனியா) | ஒரு டேபிள்ஸ்பூன் | 
| தேங்காய்த் துருவல் (விரும்பினால்) | ஒரு டேபிள்ஸ்பூன் | 
| காய்ந்த மிளகாய் | 5 | 
செய்முறை
- புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். 
- வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். 
- ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
- வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 
- பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 
- மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். 


 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
															 
								