நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடை

தேவையான பொருள்

 

ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ 1 கப்
வரகு அரிசி 1 கப்
உளுந்து ¼ கப்
கடலைப்பருப்பு (அ) சோளம் ¼ கப்
வெங்காயம் 3
கடுகு ¼ ஸ்பூன்

கருவேப்பிலை, கொத்தமல்லி 

சிறிதளவு

பச்சை மிளகாய் 

3
உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • வரகு அரிசி, உளுந்து, சோளம் அல்லது கடலைப்பருப்பைத் தனித்தனியே ஊற வைத்து கழுவி அரைத்து (மாவாக) ஒன்றகக் கலந்து கொள்ளவும்.
  • பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அரைத்த மாவில் கொட்டவும்.
  • நறுக்கிய வாழைப்பூ, உப்பு சேர்த்து அடைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
  • 5 தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருப்புறமும் லேசாக எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
  • மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.