தேவையான பொருள்
| நிலவேம்பு இலை | 10 கிராம் |
| தண்ணீர் | 200 மி.லி |
| சீரகம் | 5 கிராம் |
| சுக்கு | சிறிதளவு |
| மிளகு | 5 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சீரகம்,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் இந்த நீருடன் இடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிலவேம்பு இலை சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
- இவ்வாறு உருவான நீரை 50 மி.லி காலை மற்றும் 50 மி.லி மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் உடனே சரியாகி விடும்.

