உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்

தேவையான பொருள்

வெற்றிலை 50 கிராம்
ரோஜா இதழ்கள் 50 கிராம்
எலுமிச்சை தோல் 50 கிராம்
இலவங்கம் 50 கிராம்
தண்ணீர் 1 லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 1 லி தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் சமஅளவு வெற்றிலை,ரோஜா இதழ்கள்,எலுமிச்சை தோல் மற்றும் இலவங்கம் ஆகிய நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு 1 லி தண்ணீரை 750 மி.லி வரும் அளவு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் பருகி வந்தால் உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலன் தரும் வகையில் இந்த வடிநீர் அமையும்.