தேவையான பொருள்
தண்ணீர் | 300 மி.லி |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
இஞ்சி | சிறிய துண்டு |
மிளகு | 7 எண்ணிக்கை |
துளசி இலை | ஒரு கைப்புடி அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 300 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.
- மேலும் நீருடன் துளசி இலை சிறிதளவு மஞ்சள் தூள்,இடித்த இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- பெரியவர்கள் 250 மி.லி மற்றும் சிறியவர்கள் 100 மி.லி குடிக்கலாம்.