தேவையான பொருள்
| பிரண்டைத் துண்டுகள் | 6 – 8 கணு (துண்டுகள்) |
| புளி | சிறிதளவு |
| பச்சை மிளகாய் | 3 |
| தேங்காய் | அரைமூடி (துருவிக்கொள்ளவும்) |
| பூண்டு | 4 பல் |
| கடுகு | ஒரு டீஸ்பூன் |
| பெருங்காயத்தூள் | ஒரு சிட்டிகை |
| கறிவேப்பிலை | சிறிதளவு |
| எண்ணெய் | 2 டேபிள்ஸ்பூன் |
| உப்பு | தேவையான அளவு |
செய்முறை
- பிரண்டையை முருங்கைக்காய் துண்டு நீளத்தில் நறுக்கி, லேசாகச் சீவிக் கொள்ளவும்.
- கையில் எண்ணெய் தடவிக்கொண்டு நன்றாகக் கழுவவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
- இதனுடன் பிரண்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
- ஆறிய பின் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும்.

