முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நெய்,தேன்,பசும் பால் மற்றும் பனை வெல்லம் ஆகிய நான்கு பொருட்களையும் தவிர மீதமுள்ள பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 200 மி.லி பாலை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் பாலுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து பாகு தன்மை அடையும் வரை பால் மற்றும் பனை வெல்லதை நன்கு கலக்க வேண்டும்.
பிறகு இதனுடன் இடித்த பொடியே சிறுக சிறுக சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு தேன் மற்றும் நெய் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி வந்தால் லேகியம் தயார் ஆகி விடும்.