நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர்

தேவையான பொருள்

தண்ணீர் 500 மி.லி
கற்பூரவள்ளி இலை 4 எண்ணிக்கை
துளசி இலை 10 எண்ணிக்கை
சுக்கு பொடி சிறிதளவு
மிளகு பொடி சிறிதளவு
பனை வெல்லம் 50 கிராம்
கிராம்பு 1
தேயிலை சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீரில் கற்பூரவள்ளி இலை,துளசி இலை சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.
  • மேலும் சுக்கு பொடி,மிளகு பொடி.பனை வெல்லம்,கிராம்பு மற்றும் தேயிலை ஆகிய ஐந்து பொருட்களையும் சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு தேநீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் சளி மற்றும் காய்ச்சல் நீங்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
தண்ணீர்
கற்பூரவள்ளி இலை
துளசி இலை
சுக்கு பொடி
மிளகு பொடி
பனை வெல்லம்
கிராம்பு
தேயிலை