தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள்

நல்ல எண்ணெய் 100 மி.லி
வில்வ இலை 20 கிராம்
துளசி இலை 20 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வில்வ இலை மற்றும் துளசி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த இலைகளை பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நல்ல எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த எண்ணெய் உடன் அரைத்த சாற்றை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு இதனை குளிர ஆற வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • நோயுள்ளவர்கள் நாள்ளொன்றுக்கு ஒரு தேக்கரண்டி அளவு இந்த தைலத்தை எடுத்து தொண்டையில் படும்படி செய்து 5 நிமிடம் கழித்து தைலத்தை வெளியேற்ற வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர தொண்டையில்  ஏற்பட்ட  சதைவளர்ச்சி படிப்படியாக குணமாகும்.
துளசி இலை
வில்வ இலை
நல்ல எண்ணெய்