கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

கற்பூரம் 5 எண்ணிக்கை
மஞ்சள் தூள் சிறிதளவு
மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு
கற்றாழை உட்பகுதி ஒரு தேக்கரண்டி
வசம்பு பொடி ஒரு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.
  • இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.
  • இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும்.
கற்பூரம்
மஞ்சள் தூள்
மருதாணி இலை
கற்றாழை
வசம்பு பொடி