தேவையான பொருள்
| வெட்டி வேர் பொடி | 5 கிராம் |
| கோதுமை | 50 கிராம் |
| தனியா | 5 கிராம் |
| பசும் பால் | 150 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 50 கிராம் கோதுமையை நீரில் 24 மணி நேரம் நன்கு ஊற வைத்து அதன் தண்ணீரை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு வெட்டி வேர் பொடி மற்றும் தனியா ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் பாலுடன் அரைத்த பொடி மற்றும் வடிகட்டி வைத்த கோதுமை தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இடுப்பு வலி உள்ள பெண்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் உணவிற்கு பின் 1 மணி நேரம் கழித்து 50 மி.லி முதல் 100 மி.லி வரை குடித்து வந்தால் இடுப்பு வலி முற்றிலுமாக நீங்கும்.

