தேவையான பொருள்
மஞ்சள் பொடி | 15 கிராம் |
சந்தன தூள் | 5 கிராம் |
கிச்சிலி கிழங்கு | 5 கிராம் |
கோரை கிழங்கு | 5 கிராம் |
கசகசா | 5 கிராம் |
நல்ல எண்ணெய் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு நல்லஎண்ணெய் தவிர மீதம் உள்ள பொருட்களை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி நல்லஎண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நல்லஎண்ணெய் உடன் இடித்து பொடியாக்கப்பட்ட பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த பொருட்களை நன்கு தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
- பிறகு இந்த தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த தைலத்தை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு நரம்பு வலி மற்றும் நரம்பு வீக்கம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் நரம்பு வலி முற்றிலுமாக நீங்கும்.