நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்

தேவையான பொருள்

தண்ணீர் 250 மி.லி
மிளகு 5 எண்ணிக்கை
இலவங்க பட்டை சிறிதளவு
இஞ்சி சிறிய துண்டு
எலுமிச்சை அரைத்துண்டு
துளசி இலை 10 எண்ணிக்கை
கிராம்பு 4 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • இஞ்சி,இலவங்கப்பட்டை மற்றும் மிளகு  ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்து தண்ணீர் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் தண்ணீர் உடன் துளசி இலை மற்றும் 4 கிராம்பு சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் நீரை பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
  • இதனை தொடர்ந்து காலை நேரங்களில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.