முகத்தின் தன்மையே பொலிவு பெற வைக்கும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

ஆரஞ்சு தோல்10 கிராம்
பாசி பயிறு10 கிராம்
பன்னீர்10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஆரஞ்சு தோலை நன்றாக வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு உலர்த்திய ஆரஞ்சு தோலுடன் பாசி பயிறு சேர்த்துக்கொண்டு ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் போதியளவு பன்னீரையும் சேர்த்துக்கொண்டு நன்றாக குலைத்து தொடர்ந்து 48 நாட்கள் கை,கால் மற்றும் முகத்தில் போட்டுகொண்டு அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.