தீக்காய தழும்புகள் மறைவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சோற்று கற்றாழை (உட்பகுதி) 50 கிராம்
தேங்காய் எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சோற்று கற்றாழையை (உட்பகுதி) எடுத்து அதனை நன்றாக அரைத்து சாறு போல் மாற்ற வேண்டும்.
  • இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் 100 மி.லி தேங்காய்  எண்ணெயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனை தைலம் ஆக மாறும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு உருவான தைலத்தை தீக்காயத்தின் மேல் தொடர்ந்து போட்டு வந்தால் தீக்காய தழும்புகள் உடலில் இருந்து அறவே நீங்கும்.