சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

கொத்தமல்லி 10 கிராம்
இஞ்சி சிறிய துண்டு
மிளகு 10 எண்ணிக்கை
துளசி இலை ஒரு கைப்புடி அளவு
ஏலக்காய் 1
தேயிலை தூள் இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் 100 மி.லி
நாட்டு சர்க்கரை தேவையான அளவு
பால் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • 200 மி.லி பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கொத்தமல்லி,இஞ்சி,துளசி இலை,மிளகு,ஏலக்காய் நன்கு இடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் இடித்த பொருட்கள் மற்றும் தேயிலை தூள் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • மேலும் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொண்டு இந்த நீரை 50 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த நீரை ஏற்கனவே வடிகட்டிய பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது இருமல் மற்றும் சளியை குணமாக்கும் தேநீர் தயார்.
தண்ணீர்
இஞ்சி
மிளகு
துளசி இலை
தேயிலை
ஏலக்காய்
கொத்தமல்லி
நாட்டு சர்க்கரை