தேவையான பொருள்
பீட்ரூட் | 2 எண்ணிக்கை |
இஞ்சி | சிறிய துண்டு |
எலுமிச்சை | அரைத்துண்டு |
தேன் | தேவையான அளவு |
தண்ணீர் | 250 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு பீட்ரூட் தோலை நீக்கி நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- நறுக்கிய பீட்ரூட் உடன் இஞ்சி,எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு இதனை வடிகட்டி சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இந்த சாற்றுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது சுவையான பீட்ரூட் ஜூஸ் தயார் ஆகிவிடும்.
- மீதி உள்ள பீட்ரூட் சக்கையை முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
பயன்கள்:
1) இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
2) ஒளிரும் சருமத்தை தருகிறது.
3) உடலின் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.
4) செரிமானத்திற்கு நல்லது.
5) இயற்கையாகவே உடலின் கழிவை வெளியேற்றுகிறது.