நுரையீரல் வலுப்படுத்த மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முக்கியமான உணவுகள்

பூண்டு

பூண்டில், ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் மிகவும் உடல் சூடாக உணர்ந்தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள்.

தேன்

தேன் பாக்டீரியா எதிர்ப்பு பொருள்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தேன் நுரையீரலை வலுப்படுத்தும் முக்கிய பொருள் ஆகும். சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கலாம். தேநீர், காபி போன்றவற்றில் சர்க்கரைக்கு தேனை சேர்த்தும் பயன் பெறலாம்.

மஞ்சள்

மஞ்சள் அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுக்காக்கும் தன்மை கொண்டது. இதில், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. தினமும் தூக்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம். மஞ்சளுடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, தேநீர் போல அருந்தலாம். இது, நுரையீரலை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

அத்திப் பழம்

ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன. அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுபடுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகும்.

துளசி

துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.